Monday, August 14, 2017
இன்னொரு சுதந்திரம் வேண்டும்
Do you like this story?
ஆட்டிப் படைத்த குளிர் பனி..வெயில் மழை பாராது போராடி பெற்றோம்
கனன்று எழும் மூச்சு
உசுப்பி தட்டும் பேச்சு
கொப்பளிக்கும் கோபம்
வெடித்ததடா புரட்சி
நின்று பேச நாதியில்லை
கலந்து கொள்ள
உரிமை இல்லை.
ஒரு கட்டத்தில்
அடிவிழ அடிவிழ
அதிகாரத்தையும்
துவம்சம் செய்தது_நம்
அகிம்சை.
கிடைத்தது சுதந்திரம்
ஆனால்...அந்த
பொக்கிஷம் இன்று
என்னவாயிற்று?
சுவாசிக்க காற்றுக்கு பஞ்சம்
குடிக்க நீருக்கு பஞ்சம்
ஊழல் மலிந்தது
விலைவாசியோ ஏறுகிறது....
ஆணுக்கினி நிகராய் பெண்கள் வளர்ந்தாலும்
பெத்த வயிறு
பற்றி எரியுதே...
மது குடிமக்களை
குடி மக்களாக்கியது
பாதகம் செய்வோர் பக்கத்தில் கூட
இருப்பாரோ என
தந்தி அடிக்கும் மனம்
சிறியோர் யார்?
பெரியோர் யார்?
அவரவர் குணம்
அதிசயிக்க வைக்கிறதே
இவரா(னா) இப்படி என்று?!
பெற்றோம் சுதந்திரம்
யாருக்காக..என்ற
கேள்வி தொண்டை யுடன் நின்று போகிறது...
தீண்டாமை யிலிருந்து இன்னும் மீண்டோமா?
எங்கும் எதிலும்
காற்றைப் போல்
பரவி பரிதவிக்க வைக்கிறதே...ஊழல்
கேட்டால் எந்திர வாழ்க்கை என்போம்...
சொகுசா ன வாழ்க்கை க்கு இன்னொரு பெயரா?
புதுப்புது உணவுகள்
புதுப்புது வியாதிகள்
கேட்டாலும் கேட்பார்கள்
இனிவரும் காலத்தில்
சுத்தம் ....சுகாதாரம்
என்ன விலையென்று?
தொழில் நுட்பம் தேவைதான்_ஆனால்
அது முறைதவறி
விடக்கூடாது...
நாளை....நும் பிள்ளைகள் கேட்பார்கள்...
அப்பா..
கூட்டுக்குடும்பம்... அப்படின்னா என்னவென்று?!
விதிமுறைகள் மீறல்களாவது போலி தைரியமே... மண்ணில்
தடயங்களை.. நம் மூதாதையர் மட்டும் அல்ல... நாமும் விட்டுச் செல்வோம்
நீர்வளம்_நிலவளம்_மனவளம் காக்க
வேண்டும் இன்னும் ஓர் சுதந்திரம்....
உன்னிலிருந்து உனக்கு...?!
எழுத்து
பாரதிசங்கர்...
முக்காணி
கனன்று எழும் மூச்சு
உசுப்பி தட்டும் பேச்சு
கொப்பளிக்கும் கோபம்
வெடித்ததடா புரட்சி
நின்று பேச நாதியில்லை
கலந்து கொள்ள
உரிமை இல்லை.
ஒரு கட்டத்தில்
அடிவிழ அடிவிழ
அதிகாரத்தையும்
துவம்சம் செய்தது_நம்
அகிம்சை.
கிடைத்தது சுதந்திரம்
ஆனால்...அந்த
பொக்கிஷம் இன்று
என்னவாயிற்று?
சுவாசிக்க காற்றுக்கு பஞ்சம்
குடிக்க நீருக்கு பஞ்சம்
ஊழல் மலிந்தது
விலைவாசியோ ஏறுகிறது....
ஆணுக்கினி நிகராய் பெண்கள் வளர்ந்தாலும்
பெத்த வயிறு
பற்றி எரியுதே...
மது குடிமக்களை
குடி மக்களாக்கியது
பாதகம் செய்வோர் பக்கத்தில் கூட
இருப்பாரோ என
தந்தி அடிக்கும் மனம்
சிறியோர் யார்?
பெரியோர் யார்?
அவரவர் குணம்
அதிசயிக்க வைக்கிறதே
இவரா(னா) இப்படி என்று?!
பெற்றோம் சுதந்திரம்
யாருக்காக..என்ற
கேள்வி தொண்டை யுடன் நின்று போகிறது...
தீண்டாமை யிலிருந்து இன்னும் மீண்டோமா?
எங்கும் எதிலும்
காற்றைப் போல்
பரவி பரிதவிக்க வைக்கிறதே...ஊழல்
கேட்டால் எந்திர வாழ்க்கை என்போம்...
சொகுசா ன வாழ்க்கை க்கு இன்னொரு பெயரா?
புதுப்புது உணவுகள்
புதுப்புது வியாதிகள்
கேட்டாலும் கேட்பார்கள்
இனிவரும் காலத்தில்
சுத்தம் ....சுகாதாரம்
என்ன விலையென்று?
தொழில் நுட்பம் தேவைதான்_ஆனால்
அது முறைதவறி
விடக்கூடாது...
நாளை....நும் பிள்ளைகள் கேட்பார்கள்...
அப்பா..
கூட்டுக்குடும்பம்... அப்படின்னா என்னவென்று?!
விதிமுறைகள் மீறல்களாவது போலி தைரியமே... மண்ணில்
தடயங்களை.. நம் மூதாதையர் மட்டும் அல்ல... நாமும் விட்டுச் செல்வோம்
நீர்வளம்_நிலவளம்_மனவளம் காக்க
வேண்டும் இன்னும் ஓர் சுதந்திரம்....
உன்னிலிருந்து உனக்கு...?!
எழுத்து
பாரதிசங்கர்...
முக்காணி
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “இன்னொரு சுதந்திரம் வேண்டும்”
Post a Comment