Saturday, December 31, 2016
புத்தொளி பரவட்டும்
Do you like this story?
புதுப்பித்துக் கொள்ள
நல்நட்பு தேவை
அன்பை பரிமாற
தூய நினைவுகள்
செழுமை வாழ்விற்கு தூண்டில் போடும்
பளீர் புன்னகை தரும்
தருநிழல் போல
மாறா பருவமழை பொழிய
மாறா பருவமழை பொழிய
நாளும் நெஞ்சில் மரம் நடுவோம்
தழையச் செய்வோம்
நற்பல பழக்கங்களை
பாரினில் பார்க்கும்போது
தனித்துவம் மிளிர
வீறுநடை போட வேண்டும்
உன்மனப் போராட்டங்களில்
தண்டிக்காத போதும்
தன் மனசாட்சியையே நீதிபதியாக்கு
லாபநோக்க லாபியாக இல்லா
சேய்வளர்க்கும் தாயாய்
தொலைநோக்கில் குறிப்பறிந்து
நன்னலம் நாட வேண்டும்
வெறும் வார்த்தை ஜாலத்திற்கு
இடம்தராமல் சாதிப்போம்
இன்றே இப்போதே.
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
என்றென்றும் அன்புடன்
உங்கள் பாரதிசங்கர்
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “புத்தொளி பரவட்டும் ”
Post a Comment