Saturday, December 31, 2016

புத்தொளி பரவட்டும்

 











புதுப்பித்துக் கொள்ள
நல்நட்பு தேவை
அன்பை பரிமாற
நல் மனம் தேவை
தூய நினைவுகள்
செழுமை வாழ்விற்கு தூண்டில் போடும்

பளீர் புன்னகை தரும்
தருநிழல் போல
மாறா பருவமழை பொழிய
நாளும் நெஞ்சில் மரம் நடுவோம்


தழையச் செய்வோம்
நற்பல பழக்கங்களை

பாரினில் பார்க்கும்போது
தனித்துவம் மிளிர
வீறுநடை போட வேண்டும்
உன்மனப் போராட்டங்களில்

தண்டிக்காத போதும்
தன் மனசாட்சியையே நீதிபதியாக்கு

லாபநோக்க லாபியாக இல்லா
சேய்வளர்க்கும் தாயாய்
தொலைநோக்கில் குறிப்பறிந்து
நன்னலம் நாட வேண்டும்

வெறும் வார்த்தை ஜாலத்திற்கு
இடம்தராமல் சாதிப்போம்
இன்றே இப்போதே.


இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

என்றென்றும் அன்புடன்
உங்கள் பாரதிசங்கர்

0 Responses to “புத்தொளி பரவட்டும் ”

Post a Comment

All Rights Reserved saathiyam | Designed by Bobby