Wednesday, April 16, 2014
சாதனை தொடரும் உன்னோடு
Do you like this story?
பாலைப்போல் வெள்ளை
நெஞ்சில் கபடமில்லை
செவியில் ரொம்ப தொல்லை
இனியும் இங்கு இல்லை!
கவனம் எங்கும் தேவை
நண்பன் பகைவனாகலாம்
உறவுகள் காலை வாரலாம்
பாதைகள் கூட மாறலாம்
பயணம் மாறலாகுமோ?
மனதில் யாரும் இல்லாதவரை
மயக்கம் ஏதும் இல்லையே
கவலை கொள்ளும் போதும்கூட
துயரம் தீரவில்லையே !
சனியின் கோபம் பகைக்குமோ?
ஜாதகம் பாதகமாகுமோ?
தீயாய் விழுந்த வார்த்தைகள்
வாடும் மனதை வருடுமோ?
வெப்பம்கூட சுடுவதில்லை
சுயநலமிக்க மனிதர்களின்
விஷமங்கள் சுடுகிறதே!
தவிக்கும் மனதிற்கிங்கில்லை
தாகம் தீர வழியில்லை
சிறகை விரிக்கும் பறவையைப்போல்
பறக்கும் சக்தியும் இங்கில்லை!
விழுந்தால் எழுந்திட வழியில்லை
அமுக்குதே மாய சதிவலைகள்
இனியும் அழுதிட வேண்டாமே
எவர்தான் உணர்வார் மனிதரையும்!
உனக்கும் உனக்கும்
காலம் தான்
பாடம் சொல்லும்
நியாயம்தான் !
காலம் சொல்லும் வார்த்தைகளோ
யாருக்கும் பரஸ்பரம் பார்க்காதே!
உணர்வாய் மானிட பிறவியிலே
நாமும் இப்படி ஆவோமென்றே
கதறி கதறி அழும்போதும்
கவலைகள் தீர வழியில்லையே!
நீ செய்தால் நியாயம்
பிறர் செய்தால் பாவமா?
பழி ஓரிடம்
பாவம் வேறிடமா?
பொறுத்தது போதும் பொங்கியெழு
சகித்தது போதும் சதிராடு
கடமைகள் உந்தன் துணையோடு
காலமும் உந்தம் கையோடு!
நம்பிக்கை கொண்டே நீ ஓடு!
சாதனை தொடரும் உன்னோடு!
பிறப்பால் நீ ஒரு போராளி!
எதையும் வெல்வாய் துணிவோடு!
- பாரதி சங்கர்
முக்காணி
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “சாதனை தொடரும் உன்னோடு”
Post a Comment