Monday, August 12, 2013
சுதந்திர தின சிறப்பு கவிதை
Do you like this story?
சோகம் கொண்டு சோர்ந்த நெஞ்சில்
வேகம் வந்து சேர்ந்ததடா
வெந்து வெந்து போன மண்ணில்
வீரம் வந்து சேர்ந்ததடா
சாவைக் கூட துச்சம் என்று
சரித்திரமும் சொன்னதடா
மானம் காத்து நின்ற மறத்தை
மனமுவந்து காப்போமடா
எட்டுத்திக்கும் சொல்லும் மட்டும்
வெற்றி வாகை சூடுவோமே
என்று தணியும் அடிமை மோகம்
என்று சொன்னது பாரதீடா
உச்சி முகர்ந்து பார்க்கும் வேளை
வெற்றி உந்தன் வாசமடா
மண்ணை போற்றி வாழும் வரைக்கும்
உந்தன் பெருமை சேருமடா
கண்ணை இமை போல் காக்கும் வரை
விண்ணும் உனது காலடிதான்
வீராவேசம் போட வேண்டாம்
வீணில் கவலை கொள்ள வேண்டாம்
தவறித் தவறும் செய்ய வேண்டாம்
பாரும் உன்னை திரும்பிப் பார்க்கும்!
கானல் நீரைப் போல் தானே
வீணாய் போகும் சதிவலைகள்
விண்ணை முட்டும் சாதனைகள்
மண்ணில் இருந்து வந்ததுதான்
சுதந்திரத்தை தேடாதே
உனக்கு மட்டும் சொந்தமில்லை
எல்லோரிடமும் இருக்கும் மட்டும்
யாவருக்கும் சொந்தம்தானே!
அன்பும் அறமும் இருக்கும்போது
அகிலம் எல்லாம் உனக்கடிமை
எண்ணம் உயர இருக்கும்போது
எல்லா உயிரும் உனக்கடிமை
அடிமை என்றும் சொல்ல வேண்டாம்
அவசரத்தில் பேசும் போதும்
அன்பில் எதுவும் அடிமையில்லை
பண்பாய் நாமும் வாழுவோமே!
- பாரதிசங்கர்
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “சுதந்திர தின சிறப்பு கவிதை”
Post a Comment