Thursday, January 12, 2012
ஒற்றுமைக்கு ஒரு விழா
Do you like this story?
இயற்கை தந்த பண்டிகை
இனிமை நிறைந்த வண்ணத்தில்
மகிழ்ச்சியுடன் திகழவே
மனதைக் கவரும் திருவிழா
மண்ணின் மகிமை உணரவே
மலர்ந்து வரும் திருவிழா
பனிதூங்கும் காலையில்
துயில் எழுப்பும் திருவிழா
பறவைகளின் சப்தமும்
மலர் பூக்கும் ஓசையும்
தென்றலென தவழ்ந்திட
தொட்டுப் பேசும் திருவிழா
சூரியனின் பார்வையில்
வணக்கம் செலுத்தும் வேளையில்
காலை செய்த மாயமோ
கலைகள் யாவும் விளங்குதே!
மஞ்சள் குலையும் வைத்தாச்சு
கரும்பு கட்டும் வைத்தாச்சு
காய்கறிகளோ படையலில்
பொங்கல் பொங்குது பானையில்!
பொங்கலோ பொங்கல் பாடிக்கொண்டு
குலவை சத்தம் போட்டுக்கொண்டு
குமரிகள் வந்து கும்மிகொட்ட
கொண்டாட்டங்கள் தொடருதே!
சமையல் செய்யும் வேளையில்
மணம் வீசும் நேரத்தில்
பசி கிள்ளி எடுக்கையில்
பந்தி போடும் திருவிழா!
பச்சைப்புல் வெளியிலே
ஆற்றங்கரை ஓரத்தில்
நேற்று வைத்த பொங்கலை
ருசித்து ருசித்து உண்பரே!
கட்டிக்கரும்பை சுவைத்திடும்
குறும்புக்கார சிறுவர்கள்
வானில் விரும்பி செலுத்துவர்
பட்டம் பெற்ற(றாத) போதிலே!
சிலிர்த்து எழும் காளைகளை
உசுப்பி விடும் காளையர்
மலைக்கச் செய்யும் வேலையை
மகிழ்வுடனே செய்வரே!
இயற்கையை போற்றிடும்
இனிமையான திருவிழா
தங்க தமிழ் நாட்டிலே
தமிழருக்கு ஒரு விழா!
உலக அரங்கில் போற்றவே
உழைப்பில் உயர்ந்து மாறணும்
ஒன்று கூடி வாழவே
ஒற்றுமைக்கு ஒரு விழா!
- பாரதி சங்கர், முக்காணி.
இனிமை நிறைந்த வண்ணத்தில்
மகிழ்ச்சியுடன் திகழவே
மனதைக் கவரும் திருவிழா
மண்ணின் மகிமை உணரவே
மலர்ந்து வரும் திருவிழா
பனிதூங்கும் காலையில்
துயில் எழுப்பும் திருவிழா
பறவைகளின் சப்தமும்
மலர் பூக்கும் ஓசையும்
தென்றலென தவழ்ந்திட
தொட்டுப் பேசும் திருவிழா
சூரியனின் பார்வையில்
வணக்கம் செலுத்தும் வேளையில்
காலை செய்த மாயமோ
கலைகள் யாவும் விளங்குதே!
மஞ்சள் குலையும் வைத்தாச்சு
கரும்பு கட்டும் வைத்தாச்சு
காய்கறிகளோ படையலில்
பொங்கல் பொங்குது பானையில்!
பொங்கலோ பொங்கல் பாடிக்கொண்டு
குலவை சத்தம் போட்டுக்கொண்டு
குமரிகள் வந்து கும்மிகொட்ட
கொண்டாட்டங்கள் தொடருதே!
சமையல் செய்யும் வேளையில்
மணம் வீசும் நேரத்தில்
பசி கிள்ளி எடுக்கையில்
பந்தி போடும் திருவிழா!
பச்சைப்புல் வெளியிலே
ஆற்றங்கரை ஓரத்தில்
நேற்று வைத்த பொங்கலை
ருசித்து ருசித்து உண்பரே!
கட்டிக்கரும்பை சுவைத்திடும்
குறும்புக்கார சிறுவர்கள்
வானில் விரும்பி செலுத்துவர்
பட்டம் பெற்ற(றாத) போதிலே!
சிலிர்த்து எழும் காளைகளை
உசுப்பி விடும் காளையர்
மலைக்கச் செய்யும் வேலையை
மகிழ்வுடனே செய்வரே!
இயற்கையை போற்றிடும்
இனிமையான திருவிழா
தங்க தமிழ் நாட்டிலே
தமிழருக்கு ஒரு விழா!
உலக அரங்கில் போற்றவே
உழைப்பில் உயர்ந்து மாறணும்
ஒன்று கூடி வாழவே
ஒற்றுமைக்கு ஒரு விழா!
- பாரதி சங்கர், முக்காணி.
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “ஒற்றுமைக்கு ஒரு விழா”
Post a Comment