Saturday, January 8, 2011
சூடான சங்கதி..!
Do you like this story?
நாம் காலையில் எழுந்தவுடனே எதை மறந்தாலும் சரி... இதை மட்டும் மறப்பதில்லை... அது என்ன? அதுதான் காபி. அதை தினமும் குடிக்கிறோம். ஆனால், அது உருவானவிதம் எப்படி என்று தெரியுமா?
காபியின் பூர்வீகம்
கிறிஸ்து பிறப்பதற்கு 600 ஆண்டுகளுக்கு முன், எத்தியோப்பியா நாட்டில் காப்பா என்ற பகுதியில் கல்பா என்பவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது வழக்கத்துக்கு மாறாக, சில ஆடுகள் உற்சாகமாக ஆடியோடி திரிந்தன. இதைப் பார்த்து அதிசயித்தார், கல்பா. அவை ஒரு செடியில் உள்ள சிவப்பு பழங்களை சாப்பிட்டதால் தான் உற்சாகமாக இருக்கிறது என்பதைக் கண்டறிந்தார்.
அப்பழங்களை ருசிக்க, அளவில்லாத உற்சாகத்தை அடைந்தார். இப்படித்தான் காபிச்செடியும் இனம் காணப்பட்டது என்று ஒரு சங்கதியும் உண்டு.
17-ம் நூற்றாண்டில் மெக்கா, ஏமன் நாடுகளுக்கு யாத்திரை சென்ற பாபாபூடன் என்பவர் காபி விதைகளை இந்தியாவிற்கு கொண்டு வந்தார். அவர் முதலில் காபியை பயிரிட்ட இடம் கர்நாடகாவின் சந்திரகிரி மலை. பிறகு பிரிட்டிஷ்காரர்களால் காபி இந்திய மக்களின் வாழ்க்கையில் மட்டுமின்றி மண்ணிலும் கலந்து விட்டது.
அமெரிக்கானோ, கப்பச்சினோ, எஸ்பிரஸோ, லட்டெச்சினோ, மோக்கா, லங்கோ என காபியில் உலகப்புகழ் பெற்ற ரகங்கள் இருந்தாலும், அதை உன்னதத் தன்மையோடு அருந்த கும்பகோணம் தான் வரவேண்டும்.
பொதுவாக, குடந்தைக்காரர்கள் ரசனை உள்ளவர்கள். அதிகாலையிலேயே எழுந்து கிணற்று நீரில் குளியல் போட்டு இறைவனை தொழுதபின் அவர்களுக்கு தேவை சுடச்சுட டிகிரி காபி தான். அதைக் குடித்தபின்பு தான் அடுத்த வேலைக்குத் தயாராவார்கள்.
அதென்ன டிகிரி காபி என்கிறீர்களா?
டிகிரி என்பது பாலின் தரத்தைக் குறிக்கும் அளவீடு. கறந்த சூடு ஆறாத, தண்ணீர் கலக்காத பசும்பால். இதை வேக்டோ மீட்டர் போட்டு டிகிரி உறுதிபடுத்தியே வாங்குவார்கள். அதில் போட்டால் தான் அது டிகிரி காபி. கும்பகோணத்துக்கே உரிய பித்தளை காபி பில்டரை நன்கு சூடேற்றி, அதில் சிக்கரி கலக்காத காபித்தூளையும், சர்க்கரையையும் போட்டு, கொதிக்கும் வெந்நீரை ஊற்றி மூடிவிட வேண்டும். ஆடை இல்லாத பால் பாதி, பில்டரில் ஊற்றிய காபி டிகாஷன் பாதி. ஓங்கி ஒரு ஆற்று. பொங்கிய நுரையும், பறக்கும் ஆவியும் நாவில் படுகிற நொடியில்...நரம்புகள் கிளர்ந்து எழும்.
கும்பகோணத்தில் வீதிக்கு வீதி இந்த டிகிரி காபி கடைகள் உண்டு. என்ன கும்பகோணம் கிளம்பிட்டீங்களா...? ஆஹா...கிளம்பிட்டாங்கய்யா...கிளம்பிட்டாங்கய்யா...!?
காபியின் பூர்வீகம்
கிறிஸ்து பிறப்பதற்கு 600 ஆண்டுகளுக்கு முன், எத்தியோப்பியா நாட்டில் காப்பா என்ற பகுதியில் கல்பா என்பவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது வழக்கத்துக்கு மாறாக, சில ஆடுகள் உற்சாகமாக ஆடியோடி திரிந்தன. இதைப் பார்த்து அதிசயித்தார், கல்பா. அவை ஒரு செடியில் உள்ள சிவப்பு பழங்களை சாப்பிட்டதால் தான் உற்சாகமாக இருக்கிறது என்பதைக் கண்டறிந்தார்.
அப்பழங்களை ருசிக்க, அளவில்லாத உற்சாகத்தை அடைந்தார். இப்படித்தான் காபிச்செடியும் இனம் காணப்பட்டது என்று ஒரு சங்கதியும் உண்டு.
17-ம் நூற்றாண்டில் மெக்கா, ஏமன் நாடுகளுக்கு யாத்திரை சென்ற பாபாபூடன் என்பவர் காபி விதைகளை இந்தியாவிற்கு கொண்டு வந்தார். அவர் முதலில் காபியை பயிரிட்ட இடம் கர்நாடகாவின் சந்திரகிரி மலை. பிறகு பிரிட்டிஷ்காரர்களால் காபி இந்திய மக்களின் வாழ்க்கையில் மட்டுமின்றி மண்ணிலும் கலந்து விட்டது.
அமெரிக்கானோ, கப்பச்சினோ, எஸ்பிரஸோ, லட்டெச்சினோ, மோக்கா, லங்கோ என காபியில் உலகப்புகழ் பெற்ற ரகங்கள் இருந்தாலும், அதை உன்னதத் தன்மையோடு அருந்த கும்பகோணம் தான் வரவேண்டும்.
பொதுவாக, குடந்தைக்காரர்கள் ரசனை உள்ளவர்கள். அதிகாலையிலேயே எழுந்து கிணற்று நீரில் குளியல் போட்டு இறைவனை தொழுதபின் அவர்களுக்கு தேவை சுடச்சுட டிகிரி காபி தான். அதைக் குடித்தபின்பு தான் அடுத்த வேலைக்குத் தயாராவார்கள்.
அதென்ன டிகிரி காபி என்கிறீர்களா?
டிகிரி என்பது பாலின் தரத்தைக் குறிக்கும் அளவீடு. கறந்த சூடு ஆறாத, தண்ணீர் கலக்காத பசும்பால். இதை வேக்டோ மீட்டர் போட்டு டிகிரி உறுதிபடுத்தியே வாங்குவார்கள். அதில் போட்டால் தான் அது டிகிரி காபி. கும்பகோணத்துக்கே உரிய பித்தளை காபி பில்டரை நன்கு சூடேற்றி, அதில் சிக்கரி கலக்காத காபித்தூளையும், சர்க்கரையையும் போட்டு, கொதிக்கும் வெந்நீரை ஊற்றி மூடிவிட வேண்டும். ஆடை இல்லாத பால் பாதி, பில்டரில் ஊற்றிய காபி டிகாஷன் பாதி. ஓங்கி ஒரு ஆற்று. பொங்கிய நுரையும், பறக்கும் ஆவியும் நாவில் படுகிற நொடியில்...நரம்புகள் கிளர்ந்து எழும்.
கும்பகோணத்தில் வீதிக்கு வீதி இந்த டிகிரி காபி கடைகள் உண்டு. என்ன கும்பகோணம் கிளம்பிட்டீங்களா...? ஆஹா...கிளம்பிட்டாங்கய்யா...கிளம்பிட்டாங்கய்யா...!?
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “சூடான சங்கதி..!”
Post a Comment