Friday, June 17, 2011
இது தானா....சந்திர கிரகணம்?
Do you like this story?
சூரியன், சந்திரன், பூமி இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, பூமியின் நிழல் சந்திரனில் விழும் நிகழ்வுக்கு சந்திரகிரகணம் என்று பெயர்.
அந்த காலத்தில் கிராமங்களில் கிரகணம் என்றாலே, சந்திரனை பாம்பு விழுங்கும் நிகழ்ச்சி என்று மூடநம்பிக்கையில் ஊறிப்போய் கிடந்தனர். இதுமட்டும் போதாது என்று, அதை நிரூபிக்கும் வகையில், மேலும் சில மூடநம்பிக்கைகள் வலம் வந்தன. அவற்றுள் சில.
கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது.
கிரகணத்தின் போது, ஒரு வாயகன்ற பாத்திரத்தில், நீரை ஊற்றி, அதில் உலக்கையை செங்குத்தாக நிற்க வைப்பர். அப்போது உலக்கை நின்று விட்டால், சந்திரகிரகணத்தால் தான் நிற்கிறது என்று ஆச்சரியத்துடன் அனைவரையும் மூக்கின் மேல் விரலை வைக்கச் செய்வார்கள்.
கர்ப்பிணிப்பெண்கள் கிரகணத்தைப் பார்த்தால், கருவில் வளரும் குழந்தைக்கு ஆபத்து.
இதைப் படித்ததும் போதும்பா...சாமி என்கிறீர்களா, இப்போதும் கூட இந்த மூடநம்பிக்கை எத்தனையோ கிராமங்களிலும் உள்ளன. அதை விட்டு விடுவோம்.
பாட்டி வடை சுட்டுக்கொண்டிக்கிறாள் என்பதை நிலவு வரை எடுத்துச் சென்று மூடத்தனத்திற்கு வித்திடுவார்கள், நம் முன்னோர்கள்.
இரவில் தெரியும் எந்த வானியல் நிகழ்வுகளையும் வெறும் கண்ணால் பார்க்கலாம். பகலில் தான் பார்க்க கூடாது. ஏனென்றால், சூரிய கிரகணத்தின் போது நம் கண்களில் உள்ள விழித்திரைக்கு அதிக வேலை கொடுக்க வேண்டியிருக்கும்.
சூரிய கிரகணத்தின் போது அதன் ஒளியின் பிரகாசம் திடீர் என்று அதிகரிப்பதால் கண்கள் விழித்திரையின் அளவை சரிசெய்ய மெனக்கெடும் நிலை ஏற்படும். அப்போது கண்வலி உண்டாகும். தொடர்ந்து இந்த நிலை ஏற்படும்போது கண்பார்வைத்திறன் குறைவு ஏற்படும்.தேவையில்லாத விஷயத்தைப் பற்றி ஆராய்வதை விட, தேவையான விஷயத்தைப் பற்றி ஆராய்வது நம் எதிர்கால வாழ்வை மேம்பட வைக்கும். அந்த நல்லெண்ணத்துடன் இப்போது விஷயத்திற்கு வருவோம்.
15.6.2011 அன்று நள்ளிரவு 11.53 முதல் 16.6.2011&ம் தேதி அதிகாலை 3.33 வரை நீடித்தது, இந்த நீண்ட சந்திரகிரகணம். இதில் முழுமையாக சந்திரனை மறைத்த நிகழ்வு சுமார் 100 நிமிடங்களுக்கு நீடித்தது. இதேபோன்ற கிரகணம் 130 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் வருகிறது என்று கூற முடியாது. 2018ல் இதேபோன்ற முழுமையான சந்திரகிரகணத்தைப் பார்க்கலாம்.
ஜூன் முதல் தேதி பகுதி நேர சூரியகிரகணம் ஏற்பட்டது. இப்போது முழு நேர சந்திரகிகரணம் வந்துள்ளது. ஜூலை முதல் தேதியில் பகுதி நேர சூரியகிரகணம் வரப்போகிறது. இதனால், மக்கள் மத்தியில் உலகம் அழிந்துவிடுமோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது.
இளஞ்சிவப்பு நிறமாக வானத்து நிலா தகதகத்தது. கருமையான மேகங்கள் சூழ்ந்தபோதும் அவை மறையும் போது, புவியின் நிழல் நிலாவின் மீது படும் போது இளஞ்சிவப்பு நிறத்தில் இருள் சூழ்ந்த அந்த ரம்மியமாக இருந்தது.
நிலா இளஞ்சிவப்பு நிறமாக மாறக் காரணம், பூமியின் நிழல் அதன் மீது விழுவதுதான்.
புவியில் வளிமண்டலம் முழுவதும் தூசி துகள்களால் நிரம்பியுள்ளது. மேலும் சமீபத்தில் சிலி நாட்டில் நிகழ்ந்த எரிமலை சீற்றத்தால், உண்டான புகை முழுவதும் வளிமண்டலத்தில் சூழ்ந்துள்ளன. இந்த நிலையில் சூரிய ஒளி புவியின் மீது படுகிறது. அப்போது சூரிய ஒளியில் உள்ள நீல நிறம் வீணாகப் போகிறது. மீதமுள்ள நிறத்தில் அலைநீளம் அதிகமாக இருப்பது சிவப்பு நிறம்தான். அதுவும் வளிமண்டலத்தில் சூழ்ந்துள்ள தூசி, துகள்களால் மங்கலாகி, இளஞ்சிவப்பு நிறத்தில் புவியின் மீது படுகிறது. அந்த நிறத்தையே பூமியும் சந்திரனின் மீது பிரதிபலிக்கிறது. அதனால்தான் சந்திரன் இளஞ்சிவப்பு நிறத்தில் ஜொலிக்கிறது.
பிறைநிலாவில் பள்ளம் தெளிவாகத் தெரியும். பவுர்ணமி அன்று வரும் முழுநிலாவில் பள்ளங்கள் தெளிவாகத் தெரியாது. ஏனென்றால்,அப்போது சூரிய ஒளி நிலவில் செங்குத்தாக விழுவதால், பள்ளங்கள் மறைக்கப்படும். தலை உச்சியில் இருந்து லைட் அடிக்கும்போது, நமது நிழல் கீழே விழுவதில்லை. அதுபோல்தான் இந்த நிகழ்வும்.
சூரிய ஒளி நிலாவின் பக்கவாட்டில் விழுவதால் தான் நிலாவில் உள்ள பள்ளம் டெலஸ்கோப்பின் மூலம் பார்க்கும்போது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. கிரகணம் ஏற்படும்போதும் இருள் சூழ்ந்து விடுவதால், நிலாவில் உள்ள பள்ளங்களை நாம் பார்க்க முடிவதில்லை. நிலாவில் உள்ள பள்ளங்களை மூன் கிரியேட்டர்ஸ் எனப்படுகிறது. கிரகணம் விடும் பகுதியில் பள்ளங்கள் மீண்டும் தெளிவாகத் தெரிய ஆரம்பிக்கிறது. அப்போது சூரியனின் பிரகாசமான கதிர்கள் நிலவில் சுள்ளென்று விழுவதை டெலஸ்கோப்பின் மூலம் தரிசிக்க முடிந்தது.
சந்திரனில் பூமியின் நிழல் ஒரு லட்சத்து 85 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு விழுகிறது.
சந்திரன் பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
ஒரு வருடத்திற்கு 5 சூரியகிரகணம் உண்டாகும். அடுத்த சூரியகிரகணம் டிசம்பர் 1 அன்று ஏற்படும்.
இதற்கு முன்பு, 2000ல் முழு நேர சந்திரகிரகணம் 107 நிமிடங்கள் நீடித்தது.
பவர்ணமி அன்று கடலில் அலைகள் அதிகமாக இருக்க காரணம், சூரியன் மற்றும் சந்திரனின் ஈர்ப்பு விசைகள் பூமியில் படுவதுதான் காரணம்.
இந்த அற்புத காட்சியைக் காண, மக்கள் நள்ளிரவிலும் தூக்கத்திற்கு விடுதலை கொடுத்து விட்டு சென்னை பிர்லா கோளரங்கிற்கு படையெடுத்தனர்.
பிரத்யேகமாக வைக்கப்பட்டிருந்த டெலஸ்கோப்களில் ஆர்வம் குறையாமல் கிரகணம் முடியும் வரை காத்திருந்து அடிக்கடி பார்த்து ரசித்தனர்.
அந்த காலத்தில் கிராமங்களில் கிரகணம் என்றாலே, சந்திரனை பாம்பு விழுங்கும் நிகழ்ச்சி என்று மூடநம்பிக்கையில் ஊறிப்போய் கிடந்தனர். இதுமட்டும் போதாது என்று, அதை நிரூபிக்கும் வகையில், மேலும் சில மூடநம்பிக்கைகள் வலம் வந்தன. அவற்றுள் சில.
கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது.
கிரகணத்தின் போது, ஒரு வாயகன்ற பாத்திரத்தில், நீரை ஊற்றி, அதில் உலக்கையை செங்குத்தாக நிற்க வைப்பர். அப்போது உலக்கை நின்று விட்டால், சந்திரகிரகணத்தால் தான் நிற்கிறது என்று ஆச்சரியத்துடன் அனைவரையும் மூக்கின் மேல் விரலை வைக்கச் செய்வார்கள்.
கர்ப்பிணிப்பெண்கள் கிரகணத்தைப் பார்த்தால், கருவில் வளரும் குழந்தைக்கு ஆபத்து.
இதைப் படித்ததும் போதும்பா...சாமி என்கிறீர்களா, இப்போதும் கூட இந்த மூடநம்பிக்கை எத்தனையோ கிராமங்களிலும் உள்ளன. அதை விட்டு விடுவோம்.
பாட்டி வடை சுட்டுக்கொண்டிக்கிறாள் என்பதை நிலவு வரை எடுத்துச் சென்று மூடத்தனத்திற்கு வித்திடுவார்கள், நம் முன்னோர்கள்.
இரவில் தெரியும் எந்த வானியல் நிகழ்வுகளையும் வெறும் கண்ணால் பார்க்கலாம். பகலில் தான் பார்க்க கூடாது. ஏனென்றால், சூரிய கிரகணத்தின் போது நம் கண்களில் உள்ள விழித்திரைக்கு அதிக வேலை கொடுக்க வேண்டியிருக்கும்.
சூரிய கிரகணத்தின் போது அதன் ஒளியின் பிரகாசம் திடீர் என்று அதிகரிப்பதால் கண்கள் விழித்திரையின் அளவை சரிசெய்ய மெனக்கெடும் நிலை ஏற்படும். அப்போது கண்வலி உண்டாகும். தொடர்ந்து இந்த நிலை ஏற்படும்போது கண்பார்வைத்திறன் குறைவு ஏற்படும்.தேவையில்லாத விஷயத்தைப் பற்றி ஆராய்வதை விட, தேவையான விஷயத்தைப் பற்றி ஆராய்வது நம் எதிர்கால வாழ்வை மேம்பட வைக்கும். அந்த நல்லெண்ணத்துடன் இப்போது விஷயத்திற்கு வருவோம்.
15.6.2011 அன்று நள்ளிரவு 11.53 முதல் 16.6.2011&ம் தேதி அதிகாலை 3.33 வரை நீடித்தது, இந்த நீண்ட சந்திரகிரகணம். இதில் முழுமையாக சந்திரனை மறைத்த நிகழ்வு சுமார் 100 நிமிடங்களுக்கு நீடித்தது. இதேபோன்ற கிரகணம் 130 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் வருகிறது என்று கூற முடியாது. 2018ல் இதேபோன்ற முழுமையான சந்திரகிரகணத்தைப் பார்க்கலாம்.
ஜூன் முதல் தேதி பகுதி நேர சூரியகிரகணம் ஏற்பட்டது. இப்போது முழு நேர சந்திரகிகரணம் வந்துள்ளது. ஜூலை முதல் தேதியில் பகுதி நேர சூரியகிரகணம் வரப்போகிறது. இதனால், மக்கள் மத்தியில் உலகம் அழிந்துவிடுமோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது.
இளஞ்சிவப்பு நிறமாக வானத்து நிலா தகதகத்தது. கருமையான மேகங்கள் சூழ்ந்தபோதும் அவை மறையும் போது, புவியின் நிழல் நிலாவின் மீது படும் போது இளஞ்சிவப்பு நிறத்தில் இருள் சூழ்ந்த அந்த ரம்மியமாக இருந்தது.
நிலா இளஞ்சிவப்பு நிறமாக மாறக் காரணம், பூமியின் நிழல் அதன் மீது விழுவதுதான்.
புவியில் வளிமண்டலம் முழுவதும் தூசி துகள்களால் நிரம்பியுள்ளது. மேலும் சமீபத்தில் சிலி நாட்டில் நிகழ்ந்த எரிமலை சீற்றத்தால், உண்டான புகை முழுவதும் வளிமண்டலத்தில் சூழ்ந்துள்ளன. இந்த நிலையில் சூரிய ஒளி புவியின் மீது படுகிறது. அப்போது சூரிய ஒளியில் உள்ள நீல நிறம் வீணாகப் போகிறது. மீதமுள்ள நிறத்தில் அலைநீளம் அதிகமாக இருப்பது சிவப்பு நிறம்தான். அதுவும் வளிமண்டலத்தில் சூழ்ந்துள்ள தூசி, துகள்களால் மங்கலாகி, இளஞ்சிவப்பு நிறத்தில் புவியின் மீது படுகிறது. அந்த நிறத்தையே பூமியும் சந்திரனின் மீது பிரதிபலிக்கிறது. அதனால்தான் சந்திரன் இளஞ்சிவப்பு நிறத்தில் ஜொலிக்கிறது.
பிறைநிலாவில் பள்ளம் தெளிவாகத் தெரியும். பவுர்ணமி அன்று வரும் முழுநிலாவில் பள்ளங்கள் தெளிவாகத் தெரியாது. ஏனென்றால்,அப்போது சூரிய ஒளி நிலவில் செங்குத்தாக விழுவதால், பள்ளங்கள் மறைக்கப்படும். தலை உச்சியில் இருந்து லைட் அடிக்கும்போது, நமது நிழல் கீழே விழுவதில்லை. அதுபோல்தான் இந்த நிகழ்வும்.
சூரிய ஒளி நிலாவின் பக்கவாட்டில் விழுவதால் தான் நிலாவில் உள்ள பள்ளம் டெலஸ்கோப்பின் மூலம் பார்க்கும்போது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. கிரகணம் ஏற்படும்போதும் இருள் சூழ்ந்து விடுவதால், நிலாவில் உள்ள பள்ளங்களை நாம் பார்க்க முடிவதில்லை. நிலாவில் உள்ள பள்ளங்களை மூன் கிரியேட்டர்ஸ் எனப்படுகிறது. கிரகணம் விடும் பகுதியில் பள்ளங்கள் மீண்டும் தெளிவாகத் தெரிய ஆரம்பிக்கிறது. அப்போது சூரியனின் பிரகாசமான கதிர்கள் நிலவில் சுள்ளென்று விழுவதை டெலஸ்கோப்பின் மூலம் தரிசிக்க முடிந்தது.
சந்திரனில் பூமியின் நிழல் ஒரு லட்சத்து 85 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு விழுகிறது.
சந்திரன் பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
ஒரு வருடத்திற்கு 5 சூரியகிரகணம் உண்டாகும். அடுத்த சூரியகிரகணம் டிசம்பர் 1 அன்று ஏற்படும்.
இதற்கு முன்பு, 2000ல் முழு நேர சந்திரகிரகணம் 107 நிமிடங்கள் நீடித்தது.
பவர்ணமி அன்று கடலில் அலைகள் அதிகமாக இருக்க காரணம், சூரியன் மற்றும் சந்திரனின் ஈர்ப்பு விசைகள் பூமியில் படுவதுதான் காரணம்.
இந்த அற்புத காட்சியைக் காண, மக்கள் நள்ளிரவிலும் தூக்கத்திற்கு விடுதலை கொடுத்து விட்டு சென்னை பிர்லா கோளரங்கிற்கு படையெடுத்தனர்.
பிரத்யேகமாக வைக்கப்பட்டிருந்த டெலஸ்கோப்களில் ஆர்வம் குறையாமல் கிரகணம் முடியும் வரை காத்திருந்து அடிக்கடி பார்த்து ரசித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)


0 Responses to “இது தானா....சந்திர கிரகணம்?”
Post a Comment